தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் என முன்னாள் மேனேஜர் புகார்.. நடிகை அதிரடியாக வெளியிட்ட அறிக்கை
நடிகை தன்ஷிகா தமிழில் பேராண்மை, பரதேசி, கபாலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர். அவர் தெலுங்கிலும் தற்போது நடித்து வருகிறார்.
தன்ஷிகா பற்றி அவரது முன்னாள் மேனேஜர் பிரியா என்பவர் தற்போது ட்விட்டரில் புகார் ஒன்றை கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தன்ஷிகா மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் மனைவி கீர்த்தி அனுஷா ஆகியோர் பணம், சொத்து இருப்பவர்களை குறிவைத்து பின்தொடர்ந்து மிரட்டுகிறார்கள் என பிரியா நடிகை சாய் தன்ஷிகா பற்றி புகார் கூறி உள்ளார்.
பிரியாவின் பெற்றோரை மிரட்டி வருவதால் தான் தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் என பிரியா ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு இருக்கிறார்.

தன்ஷிகா விளக்கம்
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு நடிகை தன்ஷிகா விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். 2019ல் தான் பிரியாவை நீக்கிவிட்டதாகவும், அவர் சொல்லும் நபர்கள் யார் என்று கூட எனக்கு தெரியாது என தெரிவித்து உள்ளார்.
இதே போல அவர் தொடர்ந்து பதிவிட்டால் சட்டப்படி சந்திப்பேன் என தன்ஷிகா எச்சரிக்கையும் விடுத்து இருக்கிறார்.
I am here to clarify.@PRO_Priya pic.twitter.com/CRAivHOSKW
— சாய் தன்ஷிகா (@SaiDhanshika) December 3, 2024
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu