சாய் பல்லவி படத்திற்கு வந்த சோதனை.. வருத்தத்தில் படக்குழு, காரணம் என்ன தெரியுமா?
சாய் பல்லவி
மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை துவங்கி, இன்று இந்திய சினிமாவில் முக்கிய நாயகியாக மாறியுள்ளார் சாய் பல்லவி.
இவர் நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த அமரன் படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் தண்டேல் திரைப்படம் வெளிவந்தது.
இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தென்னிந்திய சினிமாவில் கலக்கி கொண்டிருந்த சாய் பல்லவி, தற்போது பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
தண்டேல் திரைப்படத்தில் ஒவ்வொரு ஃபிரேமிலும் சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இவருடைய சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களும் ரசிக்க வைத்தன, நடனக் காட்சிகளிலும் ரசிகர்கள் மத்தியில் ஸ்கோர் செய்தார்.
வருத்தத்தில் படக்குழு
தியேட்டரில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற தண்டேல் திரைப்படம் கடந்த வாரம் நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது. ஆனால் இப்படம் OTT தளத்தில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் சற்று வருத்தத்தில் படக்குழு உள்ளனர்.