கதையின் நாயகியாக களமிறங்கும் சாய் பல்லவி.. புதிய திரைப்படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?
கதையின் நாயகி
கதாநாயகன் திரைப்படம் மட்டும் தான் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கும் என்கிற காலம் மலையேறிப்போய், கதாநாயகிகளின் திரைப்படங்களும் வசூல் வேட்டையாடி வருகின்றன.

சமீபத்தில் முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து, பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் ஆனது. மேலும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி என பல முன்னணி கதாநாயகிகள் இதுபோன்ற திரைப்படங்களில் தொடர்ந்து கதையின் நாயகிகளாக நடித்து வருகிறார்கள்.
சாய் பல்லவி
இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி அடுத்ததாக கதையின் நாயகியாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான கிஷோர் திருமலா, அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

பக்தி மற்றும் இதிகாச கூறுகள் கொண்ட கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், கதையை கேட்டுவிட்டு சாய் பல்லவி நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எப்போதும் வலுவான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த கார்கி திரைப்படமே இதற்கு முக்கிய உதாரணமாக விளங்கும். மேலும், இவர் நடிப்பில் தற்போது ராமாயணா, ஓம் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu