தந்தை இல்லாத வலி எந்த குழ்ந்தைக்கும் வரக்கூடாது... சரிகமப மேடையில் எமோஷ்னல் ஆன பாடகி சைந்தவி
சரிகமப
ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரிகமப.
இந்த ஷோ தொடங்கப்பட்டு தற்போது சீரியர்களுக்கான 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த எபிசோட் ஆரம்பம் முதலே மக்களின் கவனத்தை பெற்று வருகிறது. அழுத சைந்தவி இந்த சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக உள்ளார் பாடகி சைந்தவி.
இவர் சினிமாவில் பாடிய அனைத்தும் பாடல்களுமே ஒரு மேஜிக் செய்துள்ளது.
நிறைய மெலோடிப் பாடல்கள் பாடிய இவர் இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷை காதலித்து திருமணம் செய்தார், இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். ஆனால் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
அழுத சைந்தவி
இந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் போட்டியாளர் உள்ளார், அவரது கணவர் தனது மகளின் பிறந்தநாளுக்கு உடை வாங்க சென்றபோது உயிரிழந்துள்ளார்.
தனது கணவரின் ஆசையையும் லட்சியத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று அந்த பெண் போட்டியாளர் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளாராம்.
அவரின் பெண் குழந்தை மேடைக்கு வர சைந்தவி கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார். சைந்தவி பேசும்போது, குழந்தைகள் மேல் எல்லா பெற்றோர்களுக்கும் அளவு கடந்த அன்பு இருக்கும், அவர்கள் கேட்பதற்கு முன்பே வாங்கி கொடுக்க ஆசைப்படுவார்கள்.
ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த குழந்தையின் அப்பா இறந்து போயிட்டாங்க. தந்தை இல்லாத வலி எந்த குழந்தைக்கும் வரக்கூடாதுன்னு நான் நினைப்பேன்.
அந்த குழந்தையோட மனசு எப்பவுமே சந்தோஷமா இருக்கணும், இந்த சரிகமப செட்டில் இருப்பவர்கள் அனைவருமே அந்த பெண்ணுற்கு சொந்தம் தான் என பேசிக்கொண்டிருக்கும் போதே கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.