விவாகரத்திற்கு பின் நடிகை சமந்தா கலந்து கொண்ட நிகழ்ச்சி, இத்தனை லட்சம் வென்றாரா!
தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக இருந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா, சமீபத்தில் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
மேலும் அவர்களின் அறிவிப்பிற்கு பின் அவர்கள் பிரிந்ததற்கு பல காரணங்கள் திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா முன்னணி நடிகராக விளங்கி வரும் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கி "Evaru Meelo Koteeswarulu" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா ரூ.25 லட்சம் வென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து அவர் கலந்து கொண்ட முதல் தொலைக்காட்சி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri