விவாகரத்தால் மனமுடைந்த நான் எப்படி இருந்தேன்- முதன்முறையாக பேசிய நடிகை சமந்தா
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
அடுத்தடுத்து படங்கள், நிறைய நிகழ்ச்சிகள் என கலந்துகொண்டு எப்போதும் பிஸியாகவே உள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஒரு நடனம் படத்திற்கு பெரிய ஹைலைட்டாக இருந்தது.
அப்பாடலுக்காக சமந்தா ஒத்திகை பார்த்த வீடியோ வெளியாக அதுவும் செம வைரலானது.
அண்மையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சமந்தா பேசும்போது, நான் சில விஷயங்களுக்கு பிறகு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினேன்.
என்னுடைய ஆலோசகர் மற்றும் நண்பர்களால் தான் மன உளைச்சலில் இருந்து வெளியே வந்தேன். உடம்பில் ஏதாவது காயம் பட்டால் மருத்துவரை சந்திப்பது போல மனதில் காயம் ஏற்பட்டால் மருத்துவர்களை அணுகுங்கள் என பேசியுள்ளார்.