திடீரென சம்பளத்தை உயர்த்திய சமந்தா! இத்தனை கோடி கேட்கிறாரா
நடிகை சமந்தா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமந்தா
நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின்பு கெரியரில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் டான்ஸ் ஆடி இருந்ததற்கு பெரிய வரவேற்பு கிடைத்ததால் அவர் தற்போது ஹிந்தியிலும் மிக பிரபலமான நடிகை தான்.
இந்திய அளவில் டாப் நடிகைகள் லிஸ்டில் சமந்தா தான் முதலிடம் பிடித்து வருகிறார்.

சம்பளம்
சமந்தா தற்போது யெசோதா, சாகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் ஒரு வெப் சீரிஸிலும் நடிக்க இருக்கிறார். அதில் வருண் தவான் தான் அவருடன் சேர்ந்து நடிக்கிறார்.
இந்நிலையில் சமந்தா தற்போது தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அவர் இதுவரை 2.5 கோடி ருபாய் அளவுக்கு சம்பளம் வாங்கி வந்த நிலையில், தற்போது 1 கோடி அதிகரித்து 3.5 கோடி கொடுங்கள் என தயாரிப்பாளர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆக கூறி வருகிறாராம்.

மதுரை முத்து Vs அதிதி ஷங்கர்.. இறுதியில் ஜெயித்தது யார் பாருங்க