தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுத்த சமந்தா! கெரியர் முடிந்துவிட்டது என கூறியதற்கு இப்படி ஒரு பதிலடி
சமந்தா
சமீபத்தில் சமந்தா நடிப்பில் ரிலீஸ் ஆன சாகுந்தலம் படம் பெரிய தோல்வி அடைந்து இருக்கிறது. சுமார் 60 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 10 கோடி கூட வசூலிக்கவில்லை என்பதால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.
'சமந்தாவின் கேரியர் முடிந்துவிட்டது, இனி அவரால் ஸ்டார் என சொல்ல முடியாது. படத்தை ஓட வைக்க பேட்டிகளில் சென்டிமென்ட ஆக கண்ணீர் விடுகிறார்' என பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு என்பவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பதிலடி
இந்நிலையில் அந்த தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
'காதில் எப்படி முடி வளரும்?' என இணையத்தில் தேடி அதன் screenshot பதிவிட்டு "#IYKYK" என குறிப்பிட்டு இருக்கிறார்.
அவர் தயாரிப்பாளர் சிட்டி பாபு காதில் முடி வளர்ந்து இருப்பதை குறிப்பிட்டு தான் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர் .