பிரிவிற்கு பின் நடிகை சமந்தாவின் பயணம்.. அதுவும் இப்படியொரு பயணமா
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த சில வாரங்களாக சமந்தா, நாக சைதன்யா பிரிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பின், கொஞ்சம் கொஞ்சமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளார் சமந்தா.
இந்நிலையில் தற்போது தனது தோழியுடன் ரிஷிகேஷ் சுற்றுப்பயணத்திற்க்கு சென்றுள்ளார்.
ஷில்பா ரெட்டி என்ற சமந்தாவின் தோழி அந்த சுற்று பயணம் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். " டேக் ஆப், முதலில் யமுனோத்ரி " என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட இந்தியாவில் 'சர் தம் யாத்ரா' என்பது இந்துக்கள் அதிகம் செல்லும் ஒரு யாத்திரை.
இமாலய மலை பிரதேசங்களான கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் ஆகிய இடங்களுக்குச் செல்லும் யாத்திரையாம் அது.
பிரிவிற்கு பின் கடவுள் சம்மந்தப்பட்ட பயணத்தில் சமந்தா ஈடுபட்டுள்ளது அனைவரையும் ஈர்த்துள்ளது.
