விவாகரத்திற்கு பிறகு அப்படி ஒரு எண்ணத்தில் இருந்தேன், ஆனால்?.. சமந்தா ஓபன் டாக்
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா.
தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்த சமந்தா உடல்நல பாதிப்புகள் காரணமாக சினிமாவில் இடையில் படங்கள் நடிக்காமல் இருந்தார்.
ஆனால் போட்டோ ஷுட்கள், தனியார் நிகழ்ச்சிகள், சொந்த தொழில் போன்றவற்றை கவனித்து வந்தார். தற்போது உடல்நிலை சரியாகியுள்ள நிலையில் மீண்டும் ஆக்டீவாக படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.

அடுத்து சமந்தா நடிப்பில் தெலுங்கில் தயாராகியுள்ள Maa Inti Bangaram திரைப்படம் வெளியாக உள்ளது.
பேட்டி
சமந்தா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது, விவாகரத்திற்குப் பிறகு மீண்டும் யாரையும் நம்ப முடியாது என நினைத்தேன்.

ஆனால் ராஜ் நிதிமோருவின் அக்கறையும் புரிதலும் வாழ்க்கையில் மீது நம்பிக்கையை மீண்டும் கொடுத்தது, அவரது நட்பு என் மனதை மெதுவாக ஆற்றியது என கூறியுள்ளார்.
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri