நடிகை சமந்தாவிற்கு அவரின் அம்மா கொடுத்த அறிவுரை, என்ன கூறியுள்ளார் பாருங்க..
நடிகை சமந்தா அவரின் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்ததில் இருந்து அவரின் பிரிவு குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சமந்தா தற்போது அவரின் தோழியுடன் இணைந்து ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார்.
மேலும் தற்போது பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பிய பின் அவர் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளாராம்.
அவரின் தோழிகளுடன் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமந்தா தொடர்ந்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் “ நீ இப்போது எப்படியாக இருக்கிறாயோ அதற்கு மகிழ்ச்சியாக இரு! எதிர்காலத்தில் உனக்கு என்ன வேண்டுமோ அதற்கு போராடு “ என தனது அம்மா கூறியதாக ஒரு பதிவினை ஷேர் செய்துள்ளார்.