அப்படியொரு விஷயமே சினிமாவில் இல்லை.. மனம் திறந்து பேசிய நடிகை சமந்தா..
சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்'
நடிகை சமந்தா இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமந்தாவின் நடிப்பில் திருமணத்திற்கு பின் வெளிவரவிருக்கும் திரைப்படம் 'மா இண்டி பங்காரம்'. தமிழில் இப்படத்திற்கு 'எங்கள் தங்கம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை சமந்தா தனது கணவருடன் இணைந்து Tralala Moving Pictures தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். வருகிற ஜூன் 19-ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

எல்லை கோடு என்பது இல்லை
'மா இண்டி பங்காரம்' திரைப்படத்தின் புரொமோஷன் விழாக்களிலும், பேட்டிகளிலும் தொடர்ந்து நடிகை சமந்தா பங்கேற்று வருகிறார்.

அப்படி ஒரு பேட்டியில் பேசிய அவர், "முன்பெல்லாம் சினிமா ஒரு ஓட்டப்பந்தயம் என்றும் அதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், போட்டியின் இறுதி வரை சென்று வெற்றியடைய வேண்டும் என்றும், நினைத்துக்கொண்டு இருந்தேன். காலப்போக்கில் தான் அப்படி ஒரு பந்தயமே இல்லை என்றும், நாம் சென்று பிடிக்க வேண்டிய எல்லை கோடு என்பது இல்லை என்றும் உணர்ந்து கொண்டேன்" என சமந்தா கூறியுள்ளார்.

உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri