இயக்குனரிடம் நடிகை சமந்தா வைத்த கோரிக்கை...காரணம் இதுதானா?
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி நடிகையாக உயர்ந்திருப்பவர் தான் நடிகை சமந்தா ரூத் பிரபு. தற்போது ஹிந்தி படங்களில் நடிக்கவும் இவரை தேடி படவாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன.
இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துவருகிறார் சாம்.
இந்நிலையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட சமந்தா ஒப்புக்கொண்டுள்ளார் இதற்காக பெரிய தொகையை அவர் சம்பளமாக பெறவுள்ளாராம்.
இதற்கான படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் படப்பிடிப்பை நகரத்திலிருந்து சற்று தொலைவில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்துமாறு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறாராம் சமந்தா.
இதற்கு காரணம் அவர் சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை பிரிந்தது என்றும் மீடியாவை சந்திக்க விருப்பில்லாததும் தான் எனவும் கூறப்படுகிறது.