நாக சைத்தன்யா மீது இப்படியொரு கோபத்தில் உள்ளாரா சமந்தா- Koffee With Karan நிகழ்ச்சியில் ஓபன் டாக்
நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் டாப் நாயகியாக கொண்டாடப்படும் ஒரு பிரபலம். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் பின் தெலுங்கில் வெற்றி நாயகியாக வலம் வர ஆரம்பித்தார்.
இப்போது பாலிவுட்டில் அடுத்த ரவுண்டை தொடங்க இருக்கிறார், விரைவில் அவர் ஹிந்தியில் நடிக்கப்போகும் படங்கள் குறித்து தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அண்மையில் நடிகை சமந்தா பாலிவுட்டில் ஹிட் ஷோவான காப்பி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமாருடன் பங்குபெற்றார்.
நாக சைத்தன்யா பற்றி சமந்தா
இந்த ஷோவில் சமந்தாவிடம் அதிகம் முன்னாள் கணவர் குறித்த கேள்விகள் தான் இருந்தன. அதில் ஒரு கேள்விக்கு சமந்தா, எங்கள் இருவரையும் ஒரே அறையில் அடைத்து வைக்க வேண்டும் என்றார் அங்கு மிகவும் ஷார்ப்பான பொருள்கள் எதுவும் இருக்க கூடாது என பேசியுள்ளார்.
அவர் கூறிய இந்த பதில் இருவருக்கும் மிகவும் பயங்கரமான சண்டை நடந்திருப்பது தெரிகிறது.
அருண் விஜய்க்கு செம ஹிட் கொடுத்த யானை மொத்தமாக செய்த வசூல் இவ்வளவா?