ஏலே படத்தை தொடர்ந்து மீண்டும் நேரடியாக டிவியில் வரும் சமுத்திரக்கனியின் திரைப்படம்
தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் சமுத்திரக்கனி. இவர் நடிப்பில் சமீபத்தில் ஏழே எனும் திரைப்படம் நேரடியாக டிவியில் வெளியானது.
அதனை தொடர்ந்து தற்போது சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளை யானை திரைப்படமும் நேரடியாக டிவியில் வெளியாகயிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
தனுஷின் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா. அதன்பின் பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கிய அவர், வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் இவர் இயக்கியுள்ள திரைப்படம் தான் வெள்ளை யானை. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம்.
இதற்காக முன்னணி தொலைக்காட்சியுடன் பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.