விஜய் பதவியேற்பு விழாவில் அந்த மூன்று பேர் மிஸ்ஸிங்.. யாரை சொல்கிறார் சமுத்திரக்கனி?
நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து முதல் தேர்தலிலேயே பிரமாண்ட வெற்றியை பெற்று முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார்.
அதை அரசியல் சுனாமி என கூறி இருக்கிறார் நடிகர் சமுத்திரக்கனி. கொடுத்தவர்களிடம் மக்கள் பணம் வாங்கிக்கொண்டு பிடித்தவர்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சமுத்திரகனி "விஜய்யிடம் அனுபவம் இல்லை என சொல்கிறார்கள், அனுபவம் இல்லாதவர்கள் தான் பார்த்து பார்த்து அனைத்தையும் செய்வார்கள்."
"அதே நேரத்தில் முக ஸ்டாலின், சீமான் போன்றவர்களின் தோல்வி வருத்தம் அளித்தது. திருமாவளவன், அண்ணாமலை போன்றவர்களும் சட்டமன்றம் சென்றிருக்க வேண்டும்".

அந்த மூன்று பேர்..
"விஜய் புதிய முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் மூன்று பேர் மட்டும் மிஸ்ஸிங். அது எனக்கு வருத்தமாக இருந்தது. உங்களை வீழ்த்த நினைத்தவர்கள் வீடு தேடி சென்று கைகுலுக்கும் பண்பாளர் நீங்கள், அந்த மூன்று பேரை விட்டுவிட மாட்டீர்கள் எங்கிற நம்பிக்கை இன்னும் எனக்கு இருக்கிறது" என சமுத்திரக்கனி பேசி இருக்கிறார்.
விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா ஆகிய மூன்று பேரை தான் மறைமுகமாக சமுத்திரக்கனி குறிப்பிட்டுள்ளார்.

சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri