இலங்கை தெருவில் நடந்து சென்ற சந்தோஷ் நாராயணன்.. ஒரு நபர் வந்து சொன்னதை கேட்டு ஷாக்
தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன்.
சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு அவர் இசையமைத்து இருந்தார். அதில் சில பாடல்கள் பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி இலங்கையை சேர்ந்த பாடகர் தான்.
இலங்கை தெருவில்..
சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இலங்கையில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாராம், அப்போது ஒரு நபர் வேகமாக வந்து போனை எடுத்து 'உதித் நாராயணன் சார்.. உங்கள் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்' என கூறினாராம்.
இந்த விஷயத்தை பற்றி தற்போது சந்தோஷ் X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
பாடகர் உதித் நாராயணன் என தன்னை தவறாக ஒருவர் நினைத்து செல்பி கேட்டதையும் சந்தோஷ் நாராயணன் பகிர்ந்து இருப்பது வைரலாகி இருக்கிறது.
I was casually walking the streets in Colombo yesterday. A young teenager came frantically running to me and took out his phone in a hurry … and said ‘Udit Narayan sir’ , I love your songs - I am so happy now to be recognised as a singer 😂😂.
— Santhosh Narayanan (@Music_Santhosh) May 14, 2025