ஒருதலை காதல்.. போனில் ப்ரோபோசல்! சரண்யா பொன்வண்ணன் காதல் கதை
தற்போது தமிழ் சினிமாவில் அம்மா நடிகை என்றாலே நினைவுக்கு வருவது சரண்யா பொன்வண்ணன் தான். பல முன்னணி நடிகர்களின் படங்களில் அவர் அம்மா ரோலில் நடிப்பில் அசத்தி வருகிறார்.
சரண்யா - பொன்வண்ணன்
சரண்யாவை ஒருதலையாக பொன்வண்ணன் காதலித்து வந்திருக்கிறார். ஆனால் அவரிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாள் கூட சிரித்து பேசியது கிடையாதாம்.
"திடீரென ஒரு நாள் போன் செய்து 'நான் ஒரு படம் எடுக்கிறேன், உங்கள் dates வேண்டும்' என கேட்டார். எத்தனை நாள் என கேட்டதற்கு 70 வருஷம் என கூறினார். யோசித்து சொல்கிறேன் என கூறி, அதன்பின் இவர் காமெடிக்கு பேசுகிறார் என விட்டுவிட்டேன்."
Arranged மேரேஜ்
"அதன் பின் 10 நாட்கள் கழித்து மீண்டும் போன் செய்து கேட்டார். அதன் பின் தான் அவர் சீரியஸாக பேசுகிறார் என புரிந்தது. அதன் பின் அவரை பற்றி விசாரிக்க தொடங்கினேன். பாரதிராஜா சார் தான் அவரை பற்றி உயர்வாக கூறினார்" என சரண்யா கூறி இருக்கிறார்.
அதன் பின் இரு குடும்பத்தினரும் பேசி திருமணம் நடைபெற்று இருக்கிறது.
அந்த படத்தை விட மூன்று மடங்கு அதிக வசூல்! விருமன் திரைப்படத்திற்கு கிடைத்த பெரிய ஒப்பனிங்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
