ஈசிஆரில் உள்ள தனது சொந்த வீட்டைவிட்டு வெளியேநிய சரத்குமார்-ராதிகா... ஏன் தெரியுமா?
சரத்குமார்-ராதிகா
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகள் பலர் உள்ளனர், அதில் ஒரு ஜோடி தான் சரத்குமார்-ராதிகா.
சாயா என்பவரை திருமணம் செய்த சரத்குமார் அவரை விவாகரத்து செய்தபின் நடிகை ராதிகாவை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார், அவர் வெளிநாட்டில் படித்து வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான 3 BHK படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கிறது. கிரிக்கெட் வீரர் சச்சின் கூட இப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தார்.
வீடு வாடகை
தற்போது நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா குறித்து ஒரு தகவல் வைரலாகிறது. அதாவது ஈசிஆரில் உள்ள தனது வீட்டைவிட்டு வாடகை வீட்டிற்கு ராதிகா மற்றும் சரத்குமார் சென்றுவிட்டார்களாம்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் சரத்குமார் பேசும்போது, 14 முதல் 15 ஆயிரம் Sqft கொண்ட வீடு அது, அந்த வீட்டின் 7 கதவுகளையும் மூட வேண்டும், 15 வேலைக்காரர்கள் அந்த வீட்டிற்காக தேவை.

பரபரப்பின் உச்சமாக தர்ஷன் திருமண கதைக்களம்- இன்னொருபக்கம் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்
தனியாக நான் இருப்பேன், ஆனால் ராதிகாவால் முடியாது, மகன் வெளிநாட்டில் படிக்கிறான், மகள்கள் திருமணம் முடிந்து அவரவர் வீட்டில் உள்ளனர்.
தனியாக இருப்பது கடினம் என இப்போது ஆழ்வார்பேட்டைக்கு வந்துவிட்டோம். ஈசிஆரில் உள்ள அந்த வீட்டை ஒரு ஐடி கம்பெனிக்கு வாடகை விட்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.