அது எனது தலையெழுத்தை மாற்றும் என நம்புகிறேன்... சரிகமப அபினேஷ் எமோஷ்னல்
சரிகமப
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டோ ஆனால் சரிகமப ஷோ செம ஹிட் ஆகிவிட்டது.
நாளுக்கு நாள் இந்த பாடல் ரியாலிட்டி ஷோக்கான ரசிகர்கள் அதிகமாகிவிட்டார்கள். கடைசியாக சரிகமப ஷோவின் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி முடிந்தது. சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 டைட்டிலை திவினேஷ் தட்டிச்சென்றார்.
அவருக்கு ரூ. 10 லட்கம் பரிசுத் தொகையும் கிடைத்தது.
அபினேஷ்
திவினேஷுடன் 6 போட்டியாளர்கள் பைனலுக்கு வந்தார்கள், அதில் ஒருவர் தான் அபினேஷ். இவர் நிகழ்ச்சி முடிந்து ஒரு பேட்டியில், நான் சரிகமப நிகழ்ச்சி செட்டை மிகவும் மிஸ் செய்கிறேன், பைனல் முடிந்ததும் அடுத்த நாள் என்ன பாடல் தேர்வு செய்யலாம் என்று யோசனை தான் முதலில் வந்தது.
எஸ்.பிபி.சரண், ஸ்வேதா மோகன் என அனைவருமே ஜாலியாக இருப்பார்கள். பைனல் முன்பு தேவா சார் பாராட்டி இருந்தார், அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த கீபோர்டை நான் பொக்கிஷமாக வைத்துள்ளேன்.
அந்த கீபோர்ட் வைத்து நான் மியூசிக் டைரக்டர் ஆகனும் என வாழ்த்தினார். அவருடைய கையெழுத்து என் தலையெழுத்தை மாத்தும் என நம்புவதாக கூறியுள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri
