'சிறப்பாக படத்திற்கு இசை அமைத்துள்ளேன்' - அரண்மனை 3 குறித்து பேசிய இசையமைப்பாளர் சத்யா
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அரண்மனை 3. இப்படம் நாளை வெளியாகிறது.
இப்படத்தில் ராஷி கன்னா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு, சாக்ஷி அகர்வால் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் சி.சத்யா கூறியதாவது:
" இது எனது 25வது படம். இந்த திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைப்பதில் எனக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது. 20 நாட்களில் முடிக்குமாறு என்னை இயக்குனர் கேட்டு கொண்டார். ஆனால் இந்த லாக்டவுன் எனக்கான நாட்களை அதிகப்படுத்தியது.
அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு சிறப்பாக படத்திற்கு இசை அமைத்துள்ளேன். அரண்மனை படத்தின் மற்ற பாகங்களைவிட இந்த படத்தில் எமோஷனல் காட்சிகள் அதிகமாக இருக்கும் " என தெரிவித்தார்.