ஒரே நாளில் வெளியாகும் இயக்குனர் செல்வராகவனின் இரு திரைப்படம்.. எப்போ தெரியுமா
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த பல திரைப்படங்கள் காலத்தால் அழிக்கமுடியாத இடத்தை பிடித்துள்ளது.
மேலும், தற்போது ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல், நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார் செல்வராகவன்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணி காயிதம் எனும் படத்தில் நடித்துள்ளார். இதுவே நடிகராக இவருக்கு அறிமுக திரைப்படம்.
இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள, பீஸ்ட் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த இரு திரைப்படங்களும், வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ஒன்றாக வெளியாகவுள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
சாணி காயிதம் ஓடிடி தளத்திலும், பீஸ்ட் திரையரங்கிலும் வெளியாகும் என்று தெரியவந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..