தங்க தட்டில் சாப்பிட்டா என்ன.. செல்வராகவனின் ட்வீட் வைரல்
இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிகராக மட்டுமே படங்களில் பிஸியாக இருக்கிறார். அவர் அடுத்து பகாசுரன் படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.
அவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பிசியாக இருந்து வரும் நிலையில் அடிக்கடி தத்துவங்களை பதிவிட்டு வருகிறார்.
இன்றைய தத்துவம்
இந்நிலையில் இன்று செல்வராகவன் ட்விட்டரில் 'ஸ்டேட்டஸ்' என்ற விஷயம் பற்றி பேசி இருக்கிறார்.
"எல்லோரும் சொல்வது! . சொத்து இருந்தால்தான் நாலு பேர் மதிப்பார்கள்!. அந்த நாலு பேர் மதிக்காவிட்டால்தான் என்ன ? வாழ்க்கையில் மிக முக்கியம் நம்மை நாம் மதிக்க வேண்டும்! மற்றபடி சோறு தங்க தட்டில் சாப்பிட்டால் என்ன வெறும் இலையில் சாப்பிட்டால் என்ன ? ருசி அதேதான்" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
எல்லோரும் சொல்வது! . சொத்து இருந்தால்தான் நாலு பேர் மதிப்பார்கள்!. அந்த நாலு பேர் மதிக்காவிட்டால்தான் என்ன ? வாழ்க்கையில் மிக முக்கியம் நம்மை நாம் மதிக்க வேண்டும்! மற்றபடி சோறு தங்க தட்டில் சாப்பிட்டால் என்ன வெறும் இலையில் சாப்பிட்டால் என்ன ? ருசி அதேதான்.
— selvaraghavan (@selvaraghavan) January 31, 2023
யாரும் பார்த்திராத அதர்வாவின் சின்ன வயது புகைப்படம்.. அப்பா முரளியுடன் எப்படி இருக்கிறார் பாருங்க