வசமாக மாட்டிக்கொண்ட செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசி திருமண பிரச்சனை, தங்கமயில் பொய் சொன்ன பிரச்சனை முடிந்து தற்போது அடுத்த பிரச்சனை தொடங்கி இருக்கிறது.
அரசி திருமணத்தை தனது சகோதரி மகன் உடன் தான் நடத்த இருந்தார் பாண்டியன். ஆனால் அது நின்றுபோனதால் தற்போது புது சிக்கல் வந்திருக்கிறது.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் திருமணம் நின்றுபோனதால் செலவு செய்த பணத்தை உடனே திருப்பி கொடு என பாண்டியன் சகோதரி குடும்பம் சண்டைக்கு வருகிறது.
அதனால் உடனே 10 லட்சம் ரூபாயை எடுத்து வந்து கொடுக்கும்படி செந்திலிடம் பாண்டியன் கூறுகிறார். ஆனால் அவர் அந்த பணத்தை தன் வேலை விஷயத்திற்காக கொடுத்துவிட்டதால் தற்போது என்ன செய்வது என தெரியாமல் நிற்கிறார்.
என்ன நடக்கும்? ப்ரோமோவில் பாருங்க.