என்னதான் இருந்தாலும் நடிகர் செந்தில் அந்த விஷயத்தில் வீக் தான்... ஓபனாக கூறிய அவரது மனைவி
நடிகர் செந்தில்
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் என்று சொன்னதும் முதலில் நியாபகம் வருவது கவுண்டமணி-செந்தில் தான்.
இவர்களுக்கு அடுத்து நிறைய பிரபலங்களின் பெயர் இடம்பெற்றாலும் எப்போதும் இவர்கள் தான் டாப். கவுண்டமணி அவ்வளவாக இப்போதெல்லாம் படங்கள் நடிப்பது இல்லை, ஆனால் அவ்வப்போது செந்தில் நடித்து வருகிறார்.
ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் சிறிய ரோலில் தோன்றியவர் செந்தில்.
அதன்பிறகு டாப் கியரில் சென்ற அவரது சினிமா பயணம் ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததன் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
இப்போது மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

மனைவியின் பேட்டி
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் செந்தில் மனைவி பேசும்போது, எனது கணவர் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அவர் பணம் விஷயத்தில் கொஞ்சம் வீக்தான்.
சொல்லப்போனால் அவருக்கு பணத்தை கூட எண்ணத் தெரியாது, அனைத்தையும் நான் தான் கவனிப்பேன்.
அதனால் திருமணம் முடிந்ததும் அவரது அப்பா என்னிடம், அவன் பண விஷயத்தில் வீக், அதனால் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதில் இருந்து சம்பளம், மற்ற வருமானம் என அனைத்தையும் நானே கவனிக்க ஆரம்பித்தேன்.
ஆனால் யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்றால் மட்டும் சம்பளத்தில் பாதியை வைத்துக்கொண்டு மீதியை என்னிடம் கொடுப்பார் என பேசியுள்ளார்.

ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! IBC Tamilnadu
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri