வெள்ளித்திரையில் அறிமுகமாகி இருக்கும் மகாநதி சீரியல் நடிகர் விஜய்... முதல் படமே ஹீரோ தான்
மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களின் பேவரெட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல்.
இப்போது கதையில் ஹைலைட்டாக காவேரி-விஜய் ரொமான்டிக் காட்சிகள் தான் ஹைலைட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இருவரையும் சேர்த்து விடுங்கள் என ரசிகர்கள் கெஞ்ச அவர்களுக்கு ஒரே சர்ப்ரைஸ் காட்சிகளாக இந்த வாரம் முழுக்க சூப்பராக ஒளிபரப்பாகி வருகிறது.
அடுத்த வாரம் கண்டிப்பாக இயக்குனர் டென்ஷன் ஏற்றிவிடுவார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
முதல் படம்
மகாநதி சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட விஜய் என்கிற சுவாமிநாதன் கன்னட மொழியில் தனது முதல் திரைப்படம் நடித்துள்ளார்.
கமரோட்டு 2 என்ற கன்னட படத்தில் கமிட்டாகி நடித்து முடித்துள்ளார் சுவாமிநாதன், இதில் அஜித்துடன் ராஜா என்ற படத்தில் ப்ரியா கதாபாத்திரத்தில் நடித்த பிரியங்கா உபேந்திரா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி தமிழ் உட்பட 6 மொழிகளில் வெளியாக உள்ளதாம். சுவாமிநாதனின் இந்த பட தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் முன்னணி ஹீரோவாக வருவார் என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு News Lankasri

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை News Lankasri
