சாப்பிட கூட வழியில்லை, கஷ்டத்தில் இருக்கும், இறந்த பிரபல சீரியல் நடிகரின் மனைவி- கண்ணீர் பேட்டி
ஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்டவர் ராஜசேகர். இவர் இரண்டு வருடங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இவருக்கும் மனைவி தாராவிற்கு குழந்தைகள் என்று யாரும் இல்லை. கணவர் இறந்த பிறகு தாரா வருமானம் இன்றி சாப்பிட கூட வழியில்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறாராம்.
ஒரு பேட்டியில் தாரா பேசும்போது, என் கணவர் சொந்தமாக வீடு, வாசல் வாங்காமல் அக்கா, தங்கைக்கு செலவு செய்துவிட்டார். அவர் இறக்கும் நேரத்தில் தான் சொந்தமாக ஒரு வீடு வாங்கினார், வீட்டிற்கு குடிபோகும் முன்பே உயிரிழந்துவிட்டார்.
வாழ்வாதாரத்திற்கு யாரும் எனக்கு உதவவில்லை, எனவே அவர் வாங்கிய வீட்டை சத்யா சீரியல் தயாரிப்பாளருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளேன். அதில் வரும் பணத்தில் என்னை கவனித்துக் கொண்டு வருகிறேன் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
கனடாவில் சென்னை தம்பதியர் மற்றும் குழந்தை பலியாக காரணமாக இருந்த விபத்து: சமீபத்திய தகவல் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri