இரவு முழுவதும் விடிய விடிய கதறி அழுதுள்ள எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஹரிப்பிரியா... அப்படி என்ன நடந்தது?
எதிர்நீச்சல் தொடர்கிறது
என்ன பிரச்சனை வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு பெண்கள் முன்னேறுவார்கள் என்பதை காட்டும் வகையில் அமைந்தது தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
ஆனால் கதை பெண்களுக்கானது இல்லை, ஆணாதிக்க எண்ணம் கொண்ட குணசேகரனுக்கான கதையாகவே 2 சீசன்களாக உள்ளது.
ஏற்கெனவே ஈஸ்வரி தாக்கியதால் தான் வழக்கு, நீதிமன்றம் என அலைந்து கொண்டிருக்கிறார். அப்போதும் திருந்தாத குணசேகரன் தற்போது வீட்டைவிட்டு வெளியே சென்ற ஜனனி வீட்டிற்கு வர வைத்து முடித்துவிட வேண்டும் என்கிறார்.

ஹரிப்பிரியா
கதைக்களம் இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருக்க சீரியலில் நந்தினியாக நடிக்கும் ஹரிப்பிரியா ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், கணவரை பிரிந்து தனியாக தனது மகனை போராடி வளர்த்து வரும் ஹரிப்பிரியா சிங்கிள் மதராக இருந்து மகனை பார்த்துக் கொள்வது கடினமான ஒரு விஷயம் என கூறியுள்ளார்.

சிங்கிள் மதராக வாழ்வது எளிதான விஷயம் அல்ல, ஒரு குழந்தையை தனியாக வளர்ப்பது என்பது உடல், மனம், பொருளாதாரம் என பல தளங்களில் போராட வேண்டிய நிலையை உருவாக்குகிறது.
இந்த நிலைக்கு வரும் பல பெண்கள் கடுமையான வாழ்க்கைப் போராட்டங்களை சந்தித்து இருக்கிறார்கள். ஒரு காலத்தில் சினிமா பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அதை கூட வெறுத்து தனியாக அறையில் விடிய விடிய அழுது இருக்கிறேன்.

அப்படி உடைந்து அழுது, பல துன்பங்களையும், சவால்களையும் கடந்து இன்று மன வலிமையுடன் இருக்கிறேன் என்றார்.