நான் எல்லாவற்றையும் உள்ளுக்குள்ளே வைத்த காரணம்- விவாகரத்து செய்திகளுக்கு பிறகு சீரியல் நடிகை ரச்சிதா பதிவு
நடிகை ரச்சிதா
கன்னட சினிமாவில் இருந்து பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் நடிகை ரச்சிதா.
முதல் தொடரே அவருக்கு பெரிய வரவேற்பு கொடுத்த அடுத்தடுத்து சரவணன்-மீனாட்சி தொடர்களில் நாயகியாக நடித்தார். அதன்பின் நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை என தொடர்ந்து நடித்தார்.
அப்படியே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ஓரளவிற்கு மக்களின் ஆதரவை பெற்றார்.

லேட்டஸ்ட் பதிவு
கடந்த சில வருடங்களாகவே ரச்சிதா மற்றும் அவரது கணவர் தினேஷ் இருவரும் பிரிந்திருக்கிறார்கள், அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்துள்ள அவர்கள் இணைந்துவிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் ரச்சிதா கடந்த சில தினங்களுக்கு முன் கணவர் மோசமாக மெசேஜ் செய்கிறார் என போலீஸில் புகார் கொடுத்த தினேஷ் விவாகரத்து பெற்றுக்கொள் என கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் ரச்சிதா Black & Whiteல் ஒரு புகைப்படம் வெளியிட்டு, தான் எல்லாவற்றையும் தனக்குள்ளேயே வைத்துள்ளதற்கு ஒரு காரணம் உள்ளது என்றும் தனக்கு நேர்ந்த விஷயங்களில் இருந்து பாடங்கள் கற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த பதிவு ரசிகர்களிடம் பேசப்பட்டு வருகிறது.
லவ் டுடே பட புகழ் நடிகை இவானா முடி வளர்ச்சிக்கு என்ன செய்கிறார் தெரியுமா?