எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக்
நடிகை ரேஷ்மா
ஜீ தமிழில் ஒளிபரப்பான எத்தனையோ சீரியல்கள் மக்களிடம் ஹிட், அப்படி 4 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய சீரியல் தான் பூவே பூச்சூடவா.
இந்த சீரியல் மூலம் பலன் அடைந்தவர்களில் ஒருவர் தான் ரேஷ்மா, இவருக்கு பூவே பூச்சூடவா சீரியல் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. இந்த தொடரை முடித்தவர் கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்து வந்தார், ஆனால் உடனே முடிந்துவிட்டது.

பின் விஜய் டிவி பக்கம் வந்தவர் கிழக்கு வாசல் என்ற சீரியல் நடித்தார், அதுவும் திடீரென முடிந்தது. மீண்டும் ஜீ தமிழ் பக்கம் வந்தவர் நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற சீரியலில் நடிக்க அந்த சீரியலும் பாதியிலேயே முடிக்கப்பட்டது.
இப்போது ரேஷ்மா சன் டிவியில் செல்லமே செல்லம் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

விமர்சனம்
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை ரேஷ்மா தனது நிறம் குறித்து எதிர்க்கொள்ளும் விமர்சனம் பற்றி கூறியுள்ளார். அதில் அவர், ஏதோ ஒரு கெட்ட வார்த்தையை கூறி கருவாச்சின்னு கமெண்ட் செய்வார்கள்.

அந்த வார்த்தை கோபத்தை தூண்டும், ஆனால் வலிக்கல. ஏன் என்றால் அது அவர்களுடைய சொந்த எண்ணத்தைத்தான் காட்டுகிறது.
நான் வெள்யை ஆக வேண்டும் என நினைத்திருந்தால் எப்போதோ ஆகியிருக்கலாம், ஆனால் என் நிறத்தை நான் நேசிக்கிறேன் என கூறியுள்ளார்.