பூவே பூச்சூடவா சீரியல் நடிகை ரேஷ்மாவிற்கு விரைவில் திருமணம்- எப்போது தெரியுமா?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா என்ற சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் முக்கிய நாயகியாக நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா.
அந்த வருட ஆரம்பத்தில் தான் மதன் என்ற சீரியல் நடிகரை காதலிப்பதாக அறிவித்தார். எல்லோரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர், இருவரும் அவ்வப்போது ஒன்றாக எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்த வண்ணம் உள்ளனர்.
இப்போது இவர்கள் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் என்ற சீரியலில் ஒன்றாக இணைந்து நடிக்கிறார்கள், அண்மையில் தான் சீரியலும் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.
ரேஷ்மா இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அதில் ஒரு ரசிகர் திருமணம் எப்போது என கேட்க, விரைவில் என பதில் கொடுத்துள்ளார்.