சீரியல் நடிகருடனான விவாகரத்து பிரச்சனைக்கு பிறகு புதிய கார் வாங்கிய நடிகை- சம்யுக்தா வெளியிட்ட வீடியோ
சம்யுக்தா-விஷ்ணுகாந்த்
விஜய் தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து என்ற தொடர் புதுமுக நடிகர்களுடன் தொடங்கப்பட்டது. தொடர் ஆரம்பித்து நீண்ட மாதங்கள் வரும் என்று பார்த்தால் குறுகிய காலகட்டத்திலேயே முடிவுக்கும் வந்தது.
இந்த தொடரில் நடிக்கும் போது விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவருக்கும் காதல் ஏற்பட திருமணமும் செய்தார்கள்.

ஆனால் திருமணம் ஆக ஒரே மாதத்தில் நிறைய பிரச்சனைகள் கூறி இருவரும் பிரிந்துவிட்டார்கள். ஒருவர் மாறி ஒருவர் குறை கூறி வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

புதிய கார்
தற்போது திருமண பிரச்சனை முடிந்து அவரவர் தங்களது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை சம்யுக்தா புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டு, குரைக்கிற நாய் குறைக்கட்டும், தனியாக ஒரு பெண் சுதந்திரமாக உழைத்து முன்னேறுவது இந்த சமூகத்தில் சாதாரண விஷயம் இல்லை. எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி என பதிவிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்- என்ன தெரியுமா, புகைப்படத்துடன் இதோ