வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த சேனல் ஹெட்: சீரியல் நடிகை ஸ்ரீநிதி அதிர்ச்சி புகார்
பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி தன்னிடம் ஒரு சேனலில் பெரிய பதவியில் இருக்கும் நபர் தன்னை வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாக ஷாக் தகவலை கூறி இருக்கிறார்.
ஸ்ரீநிதி
சீரியல் நடிகை ஸ்ரீநிதி கடந்த சில வாரங்களாக இன்ஸ்டாகிராமில் பரபரப்பை ஏற்படுத்தும் பல பதிவுகளை போட்டு வருகிறார். சிம்புவை காதலிப்பதாக கூறியது, அதன் பின் சிம்பு வீட்டின் முன்பே சென்று போராட்டம் நடத்தியது என அவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் அவர் சினிஉலகத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் தான் சந்தித்த casting couch பற்றி பேசி இருக்கிறார்.
தவறாக நடத்த சேனல் ஹெட்
ஒரு ஷோ பற்றி பேச வேண்டும் என சொல்லி ஆபிசுக்கு வர சொன்னார்கள். ஆனால் அது பார்ப்பதற்கு வீடு போல இருந்தது. அதன் உள்ளே ஆபிஸ் செட்டப் வைத்திருந்தார்கள்.
அப்போது அந்த நபர் என்னிடம் தவறாக அணுகினார். அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை. என்னை அவரது மடியில் அமர சொன்னார். நானும் பயத்தில் அமர்ந்தேன்.
கீழே என் பிரென்ட் வெயிட் பன்னிட்டு இருக்கார், போகணும் என சொல்லி அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். அப்படி பொய் சொல்லி தான் தப்பித்தேன் என ஸ்ரீநிதி தெரிவித்து உள்ளார்.
பேட்டி வீடியோ இதோ