சொந்த தொழிலில் அடுத்த கட்டத்திற்கு சென்ற சீரியல் நடிகை யமுனா... வீடியோ இதோ
நடிகை யமுனா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் யமுனா.
இந்த சீரியலில் பேயாக சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். சின்னத்திரையை தாண்டி தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் படங்கள் கமிட்டாகி நடித்துள்ளார். வெயில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், செய், கொலை உள்ளிட்ட படங்களிலும் யமுனா நடித்துள்ளார்.

முதன்முறையாக சின்னத்திரையில் யமுனா அபூர்வ ராகங்கள் என்ற சீரியலில் அறிமுகமானார். சீரியல் நடிக்க தொடங்கிய சில வருடங்களில் திருமணம் செய்து குழந்தையும் பெற்றார்.
மயில் எடுத்த முடிவு, இப்போது பாண்டியன் குடும்பத்தில் வெடிக்கப்போகும் பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோரஸ் 2
புதிய தொழில்
சீரியல்கள், படங்கள் நடிப்பதை தாண்டி யமுனா சொந்த தொழிலையும் நடத்தி வருகிறார். சேலையும் ரவிக்கையும் என்ற பெயரில் புடவை வியாபாரம் செய்கிறார்.

கடந்த சில வருடங்களாக இந்த தொழிலை செய்து வருபவர் இப்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார்.
புதிய இடத்தில் கடையை திறந்துள்ளார், அங்கு பூஜை போடும்போடு எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.