ஷபானா - ஆர்யன் விவாகரத்து சர்ச்சை.. முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்
சீரியலில் பிரபலங்களாக இருந்த ஷபானா - ஆர்யன் காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான சில வாரங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியானது.
ஏனென்றால், திருமணமான சில நாட்களில் நடிகை ஷபானா சோகமான பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இதனால், ரசிகர்கள் மத்தியில் குழப்பங்களுடன் பல கேள்விகள் எழுந்தது.
ஷபானா திருமணமான சில நாட்களிலேயே சோகமான பதிவை ஒன்றை வெளியிட்டார். ஆர்யன் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றும், வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்போவதாகவும் தகவல் வெளியானது.
எனவே, ஷபானா - ஆர்யன் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஷாபனாவுடன் சேர்த்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை ஸ்டோரியில் பதிவு செய்து, 'மகிழ்ச்சியான இரண்டாவது மாதம்' பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அணைத்து விவாகரத்து சர்ச்சைக்கும் ஆர்யன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.