சூப்பர்ஸ்டாரும் மனுஷன் தான்.. எப்படி வயிறெரியும்: தனுஷ் விவாகரத்து பற்றி பேசிய பிரபல நடிகை
நடிகர் தனுஷ் விவாகரத்து அறிவித்து இருப்பது பற்றி தான் இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் பேசிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நடுவில் என்ன நடந்தது என்பது பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி நடிகை ஷகீலா பேசி இருக்கிறார். வதந்தி பரப்புபவர்கள் பற்றி அவர் கடும் கோபத்துடன் பேசி இருக்கிறார் அவர். ஷகீலா கூறி இருப்பதாவது..
"தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம் தான் இப்போது நாட்டுக்கு ரொம்ப அவசியமா. அது அவர்களது பர்சனல் விஷயம். அவர்கள் அதை தெளிவாக அறிவித்துவிட்டார்கள். சமந்தா டைவர்ஸ் செய்தபோது அவரை என்னவெல்லாம் சொன்னீங்க. அவரது மனம் எவ்ளோ ரணமாக இருக்கும்."
"உங்கள் வீட்டில் அக்கா அல்லது தங்கை டைவர்ஸ் செய்தால் அப்படி பேச உங்களுக்கு மனம் வருமா. எதிர்வீட்டு பையனுடன் காதல், அதனால் தான் டைவர்ஸ் ஆகிவிட்டது என வாய்கூசாமல் உங்களால பேச முடியுமா."
"தனுஷ் குழந்தைகள் பற்றி ஏன் நீங்க கவலைப்படுறீங்க, உங்க குழந்தைகளை நல்லா பாத்துக்கிறீங்களா? அதை முதல்ல பாருங்க.. ரஜினி பேர பசங்களை பத்தி அப்புறம் பாக்கலாம். அவர்களுக்கு நடுவில் என்ன நடந்தது என தெரியாமல் நீங்கள் பேசுறீங்க. சினிமா காரர்கள் என்பதால் தான் இப்படி பேசுறீங்க."
"சிம்புவை ஏன் இப்போ இழுக்குறீங்க. அவர் யாரை கல்யாணம் பண்ண போறார்னு ஏன் இப்போ பேசுகிறீங்க." "சூப்பர்ஸ்டாரும் மனுஷன் தான். பெற்ற மகள் என்பதால் அவருக்கு எப்படி வயிறு எரியும். கமல் மகள்களை பற்றி அவ்ளோ மோசமா பேசுறீங்க. அவங்க அரை குறை உடையில் ஆடுறாங்க என சொல்றீங்க. புடிக்கலன பாக்காதீங்க."
"சமந்தாவுக்கு நாக சைதன்யா 200 கோடி கொடுத்ததா சொல்றீங்க. நீங்க போய் பாத்தீங்களா. எனக்கு தெரியும் அவங்க ரெண்டு பெரும் பேசுறாங்களா இல்லையா என்று. நான் பேசலாம்." இவ்வாறு ஷகீலா கூறி இருக்கிறார். வீடியோ இதோ..