கர்ப்பமாக இருக்கும் ஜனனியை அன்பாக பார்த்துக்கொள்ளும் சக்தி.. எதிர்நீச்சல் இன்றைய புரோமோ
எதிர்நீச்சல்
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் கடந்த எபிசோடில் மதிவதனியின் என்ட்ரி ஆதி குணசேகரனுக்கு பல அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

ஜனனியை பார்க்க வந்த மதிவதனி, குணசேகரனின் வழக்குகள் அனைத்தும் மீண்டும் விசாரணைக்கு வரப்போகிறது என்றும் உங்களுக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்றும் கூறினார்.
கர்ப்பமாக இருக்கும் ஜனனியை மிகவும் கவனமாக சக்தி பார்த்து கொள்கிறார். இதற்காக பிசினஸ் கூட வேண்டாம் என சக்தி கூறினார். இது சற்று அதிருப்தியை ஜனனிக்கு தந்திருந்தாலும், சக்தி தன்னுடன் இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அழகிய புரோமோ
இந்த நிலையில், தற்போது ஜனனி மற்றும் சக்தி காரில் செல்கின்றனர். அப்போது தனது மனைவிக்காகவும், குழந்தைக்காகவும் காரை சற்று மாற்றி அமைக்கிறார் சக்தி. தனது கணவரின் கவனிப்பால் மகிழ்ச்சியில் திளைக்கிறார் ஜனனி.
இதோ அந்த புரோமோ வீடியோ: