பல வருடங்களுக்கு பின்பு ஷாலினி அஜித் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஹாப்பி
ஷாலினி அஜித்
குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் முன்னணி கதாநாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை ஷாலினி அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த அமர்க்களம், அலைபாயுதே, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற படங்கள் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு, நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆதிவிக் என்கிற மகனும் உள்ளனர்.
ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்..
நடிகர் அஜித் பல ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு, விருது விழாக்களில் கலந்துகொள்வது என எதிலும் பங்கேற்பது இல்லை. அதை முற்றிலுமாக தவிர்த்து வருகிறார். அதே போல்தான் ஷாலினியும் விருது விழாக்களில் அவர் தலைகாட்டுவதில்லை.

விருது விழா
இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பின் நடிகை ஷாலினி அஜித் JFW Movie விருது விழாவில் கலந்துகொண்டுள்ளார். ஷாலினி விருது விழாவில் கலந்துகொண்டுள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும், இன்ஸ்டா பக்கத்தில் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார்கள்.