மீண்டும் சிக்கக்கில் இயக்குனர் சங்கர்.. காரணம் இதுதானா
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005ல் வெளியான திரைப்படமே அந்நியன்.
இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இதற்கு அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார்.
அந்நியன் படத்தின் கதைக்கான உரிமை தன்னிடம் உள்ளது என்றும், தனது அனுமதி பெறாமல் இந்தியில் ரீமேக் செய்ய முடியாது என்றும் கூறினார்.
இதற்கு பதில் அளித்து சங்கர் கூறும்போது, " அந்நியன் கதை என்னுடையது. எனவே படத்தை இந்தியில் ரீமேக் செய்ய யாருடைய அனுமதியும் கேட்க தேவை இல்லை '' என்றார்.
இந்நிலையில் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக ஆஸ்கார் ரவிச்சந்திரனும் தற்போது அறிவித்து உள்ளார்.
அந்நியன் இந்தி ரீமேக்கில் இந்தி மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிப்பார்கள் என்றும் தெரிவித்து உள்ளார். ஒரே படத்தை இருவர் ரீமேக் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது, திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.