அந்நியன் படத்தால் வந்த விவகாரம், தயாரிப்பாளருக்கு இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அந்நியன், பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படம் தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது.
இதனிடையே இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். மேலும் அப்படத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ள நிலையில், தன்னிடம் முறையான தடையில்லா சான்று பெறவில்லை என வழக்கு தொடரவுள்ளதாக தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஷங்கர் பதில் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்நியன் திரைப்படத்தின் கதை எனக்கே சொந்தம். கதை, திரைக்கதை, இயக்கம் என என் பெயரே திரைப்படத்தில் இடம் பெற்று இருந்தது.
மேலும் சுஜாதாவை நான்தான் வசனம் எழுத அழைத்து வந்தேன் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.