அடி வாங்காத நாளே இல்லை, பிரசவ நேரத்தில் கூட- கணவரால் பட்ட கஷ்டம் குறித்து சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ்
சாந்தி வில்லியம்ஸ்
நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும் மெட்டி ஒலி தொடரில் கொடுமைக்கார மாமியாராக நடித்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் சாந்தி வில்லியம்ஸ்.
இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சாந்தி வில்லியம்ஸ் தனது வாழ்க்கையில் சந்தித்த, தனது கணவரால் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து எமோஷ்னலாக பேசியுள்ளார்.
நடிகையின் பதிவு
எனக்கு விருப்பம் இல்லாமல் மிரட்டி நடந்தது எனது கல்யாணம், திருமணம் முடிந்து 3 மாதம் கழித்து தான் என்னை பார்க்க வந்தார்.
எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், 2 மகன்களும் பிறந்தார்கள். முதல் குழந்தை பிறந்த நேரத்தில் வில்லியம்ஸ் முதல் மனைவி திரும்ப வந்தார், அவருடன் போக வில்லியம்ஸ் முயற்சி செய்தார்.
நானும் வில்லியம்ஸிடம் எனக்கு உங்க கூட வாழ பிடிக்கல, நீங்கள் அந்த பெண்ணோடு சென்றுவிடுங்கள் என்றேன், ஆனால் அதற்குள் அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டார்.
யார் மேல கோபம் என்றாலும் வில்லியம்ஸ் என்னை வீட்டிற்கு வந்து அடிப்பார், தூக்கிப்போட்டு எல்லாம் மிதிப்பார், அவரிடம் வாங்காத அடியே இல்லை. கே.கே.நகரில் சுமார் ரூ. 100 கோடி சொத்தை படம் எடுக்க வேண்டும் என்று வாங்கி விற்றுவிட்டார்.
படம் நஷ்டமாகி, அவர் அடமானம் வைத்த நபரும் கடன் வாங்கி எதுவுமே கட்ட முடியாததால் அந்த இடம் அப்படியே ஜப்தியாகி விட்டது.
கிட்டத்தட்ட 500 சவரன் நகையை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார் என பல சோகமான விஷயங்கள் குறித்து சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
