அட்ஜஸ்ட்மென்ட் அழைத்தால் அப்படி தான் நடந்துகொள்வேன்.. நடிகை ஷில்பா பேட்டி
ஷில்பா மஞ்சுநாத்
கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான எமன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இதனை அடுத்து இவர் காளி என்ற படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது.
அதன் பின்னர் இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஷில்பா மஞ்சுநாத் கன்னடம் மற்றும் தெலுங்கிலும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அட்ஜஸ்ட்மென்ட்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஷில்பாவிடம் அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு அழைத்திருக்கிறார்களா? சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
பதில் அளித்த அவர், யாரும் நேரடியாக கேட்க துணிவு கிடையாது. வேறொரு மூலமாக அப்படி கேள்வி கேட்பார்கள். அந்த பேச்சு வரும் போது நான் கட் பண்ணிவிடுவேன். கடைசியில் அவர் அப்படி கேட்க வாய்ப்பே கொடுக்கமாட்டேன் என்று ஷில்பா கூறியுள்ளார்.
