ரூ.60 கோடி மோசடி.. நடிகை ஷில்பா ஷெட்டியை தேடும் போலீஸ்
நடிகை ஷில்பா ஷெட்டி ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர். அவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ, குஷி போன்ற படங்களிலும் தோன்றி இருப்பார்.
ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர். ஆபாச படம் தொடர்பான வழக்கில் சில வருடங்களுக்கு முன்பு அவர் கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி வழக்கில் சிக்கிய ஷில்பா ஷெட்டி
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி மும்பை தொழிலதிபர் ஒருவர் போலீசில் புகாரை ஒன்றை அளித்து இருக்கிறார். தன்னிடம் 60 கோடி ரூபாயை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஏமாற்றிவிட்டதாக அவர் கூறி இருக்கிறார்.
தொகை பெரியது என்பதால் economic offences wingக்கு புகார் மாற்றப்பட்டு, அவர்கள் தற்போது விசாரணையில் இறங்கி இருக்கின்றனர்.
ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்வது வழக்கம் என்பதால் அவர்கள் தப்பாமல் இருங்க economic offences wing போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு இருக்கின்றனர்.
இந்த வழக்கில் அவர்கள் இருவரும் கைதாகவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.