75 வயது நடிகருடன் திருமணம்.. ஒப்புக்கொண்டது ஏன் என சர்ச்சை சீரியல் பற்றி ஷோபனா விளக்கம்
கலைஞர் டிவியில் விரைவில் மீனாட்சி சுந்தரம் என்ற சீரியல் வர இருக்கிறது. அதில் நடிகர் எஸ்வி சேகர் தன்னை விட 30 வயது குறைவான இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வது போல ப்ரோமோவில் காட்டப்பட்டு இருந்தது.
இந்த ப்ரோமோவை பார்த்து பலரும் அதிர்ச்சி தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக எஸ்வி சேகரை திருமணம் செய்துகொள்ளும் பெண் ரோலில் நடித்திருக்கும் ஷோபனா எப்படி இதில் நடிக்க ஒப்புக்கொண்டார் என பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
சர்ச்சைக்கு பதில்
இந்த சர்ச்சைக்கு தற்போது நடிகை ஷோபனா பதில் கொடுத்து இருக்கிறார்.
"இது சர்ச்சையான கதை தான். ஆனால் நடிப்பில் explore செய்யலாமா என ஒப்புக்கொண்டேன். ஒரே விதமான ரோலில் நடிக்க வேண்டும் என்று இல்லை, பல விதமான ரோல்களில் நடிக்கலாம்."
"எப்படி நடித்தாலும் கொஞ்சம் பேர் நெகடிவ் ஆக பேசத்தான் போகிறார்கள். அப்படி நெகடிவ் வந்தாலும் வாங்கிக்கொள்ளலாம் தப்பு இல்லை. "
"அந்த ப்ரோமோவை பார்த்துவிட்டு என் friends கூட அதிர்ச்சி ஆகிவிட்டார்கள். முன்பு நடி என சொன்னவர்கள் கூட இதை பார்த்து ஷாக் ஆனதாக கூறினார்கள்" என ஷோபனா கூறி இருக்கிறார்.