பெற்றோர் பற்றி பேசி கண்ணீர் விட்ட சிம்பு! பிக்பாஸ் அல்டிமேட் வைரல் ப்ரோமோ
நடிகர் சிம்பு தற்போது பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் இன்று அவர் தனது பெற்றோர் பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார்.
பிக் பாஸ் அல்டிமேட்
கமல்ஹாசனை வெளியேறிய பிறகு தற்போது சிம்பு தான் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்த வாரம் இந்த ஷோ முடியவடைய உள்ள நிலையில் இந்த வாரம் சிம்பு ஷோவில் இருந்து ஒருவர் 25 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு போக வேண்டும் என கூறுகிறார்.

கண்ணீர் விட்ட சிம்பு
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த ப்ரோமோ வீடியோவில் சிம்பு தனது அப்பா மற்றும் அம்மா இருவரும் எப்படி வளர்த்தார்கள் என சொல்லி கண்கலங்கி பேசி இருக்கிறார்.
"எனக்கு கிடைத்த தாய் தகப்பன் போல அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா என தெரியவில்லை. இன்று நீங்கள் எல்லோரும் என்னை பார்த்து ரசிக்கிறீர்கள். என்னை இந்த அளவுக்கு அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்" என சிம்பு கண்ணீர் விட்டு இருக்கிறார்.
#BBUltimate இல் இன்று..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) April 3, 2022
▶ 6:30 pm Onwards..#Day63 #Promo4 #NowStreaming only on #disneyplushotstar pic.twitter.com/NxxdmUfqZE