நடிகர் சிம்புவின் அடுத்த படம் ஓடிடி-யில் ரிலீஸ்? பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம்
தமிழ் திரையுலகில் தனது சிறு வயதில் இருந்து நடித்து வருபவர் நடிகர் சிம்பு.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் பூர்த்தி செய்யவில்லை.
மேலும் தற்போது சிம்புவின் நடிப்பில் மாநாடு திரைப்படம் முழுமையாக படப்பிடிப்பு முடிந்த டப்பிங் நடந்து வருகிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக சிம்பு நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் ஒன்று ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
ஆம் நீண்ட நாட்கள் கழித்து சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்து உருவாகி யுள்ள படம் தான் மஹா.
இப்படம் தான் விரைவில் ஓடிடி-யில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பிற்காக.