ஷூட்டிங்கில் இருந்து பாதியில் வெளியேறினாரா சிம்பு? பத்து தல இயக்குனர் விளக்கம்
சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் பற்றிய வதந்திக்கு இயக்குனர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
வதந்தி
மஃப்டி என்ற கன்னட படத்தின் ரீமேக் தான் பத்து தல. Obelu N Krishna இந்த படத்தை இயக்கி வருகிறார். கர்நாடகாவில் முதற்கட்ட ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் அதில் இருந்து சிம்பு பாதியிலேயே வெளியேறிவிட்டார் என செய்தி சமீபத்தில் பரவியது.
சிம்பு சட்டையை கழற்றி நடிக்க சொன்னதற்காக சிம்பு ஷூட்டிங்கில் இருந்து கிளம்பிவிட்டார் என செய்தி பரவியது.
சிம்பு சமீப காலமாக எந்த சர்ச்சையில் சிக்காமல் இருக்கும் நிலையில், தற்போது இப்படி ஒரு செய்தி வந்தது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.
இயக்குனர் விளக்கம்
இந்நிலையில் இயக்குனர் Obeli.N.Krishna ட்விட்டரில் இது வதந்தி என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
"தயவுசெய்து வதந்தி பரப்பாதீர்கள். எதிர்பார்த்ததை விட சிம்பு சிறப்பாக நடித்து கொண்டிருக்கிறார். நான் பர்சனல் ஆக அவர் நடிப்பை என்ஜாய் செய்து வருகிறேன். திரையில் பார்க்கும் போது அது எல்லோருக்கும் பிடிக்கும்" என தெரிவித்து இருக்கிறார்.
Dear all , Kindly don’t spread rumours. Our #atman @SilambarasanTR_ is giving us more than our expectations. I personally enjoying the moments of his presence . I am sure everyone feels same on screen ..cheers https://t.co/nV4EakJlZf @StudioGreen2 @kegvraja @NehaGnanavel
— Obeli.N.Krishna (@nameis_krishna) August 12, 2022