நான் தான் அப்பா என கிளம்பிய மகேஷ்.. அன்பு நிலைமை? சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ
சிங்கப்பெண்ணே சீரியலில் கதை அடுத்து ஆனந்தி கர்ப்பம் பற்றி தான் வர இருக்கிறது. அந்த குழந்தைக்கு யார் அப்பா என அன்பு மற்றும் மகேஷ் இருவரும் சண்டை போடும் வகையில் கதை செல்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோவில் என்ன இருக்கிறது என பார்க்கலாம்.

நான் தான் அப்பா: மகேஷ்
வயிறு பெரிதாகிவிட்டதால் தான் கர்ப்பமாக இருப்பது இனி பார்க்கும் எல்லோருக்கும் தெரியப்போகிறது. அப்பா யார், குழந்தையை எப்படி உலகத்திற்கு கொண்டு வர போகிறேன் என வருத்தமாக பேசுகிறார் ஆனந்தி. ஆனால் அன்பு "நான் தான் குழந்தைக்கு அப்பா என சட்டப்படி ஆனந்தியை உணர வைக்கிறேன்" என சொல்கிறார்.
மறுபுறம் மகேஷ் சார் 'குழந்தைக்கு உயிர் கொடுத்தது நான் தான்' என சொல்லி கிளம்பி இருக்கிறார். அடுத்து என்ன நடக்கும்? ப்ரோமோவை பாருங்க.