ரகுவை தப்பவிட்ட ஆனந்தி, மித்ராவிற்கு தெரிந்த உண்மை.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ
சிங்கப்பெண்ணே
சன் டிவியில் தெறிக்கும் எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகும் தொடர் சிங்கப்பெண்ணே.
ஆனந்தி கர்ப்பமானது பற்றிய கதைக்களம் தான் கடந்த 4, 5 வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது, ஆனால் கண்டுபிடித்தது போல் தெரியவில்லை. எந்த ஒரு ஆதாரமும் இல்லை என தவித்த போது சௌ சௌ சொன்ன விஷயத்தால் வீடியோவை கைப்பற்றி ஒரு சின்ன க்ளூ கிடைத்தது.
தனக்கு மட்டும் தனியாக ஜுஸ் கொடுத்தது யார் என்பதை கண்டறிந்து அவரை பிடிக்கவும் செய்தார்கள் ஆனந்தி அன் கோ.

புரொமோ
ஆனால் ரகுவை அடித்து புரட்டி கொல்ல சென்ற ஆனந்தி அவரை தப்பவிட்டு விட்டார். இதனால் ஆனந்தி நான் தப்பு செய்துவிட்டேன், எனது கோபம் என் கண்ணை மறைத்துவிட்டது என புலம்புகிறார்.

ரகுவை பிடித்து ஆனந்தி அடித்த விஷயமும் தெரியவர இதற்கு பின்னால் நாம் தான் இருக்கிறோம் என ஆனந்திக்கு தெரிந்தால் என்ன ஆகும் என மித்ரா பயப்படுகிறார்.
இதோ இன்றைய எபிசோடிற்கான புரொமோ,
சிங்கப்பூரில் பிரான்ஸ் நாட்டு மாணவரின் தகாத செயல்: ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu