ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ
சிங்கப்பெண்ணே
சன் டிவி சீரியல்களில் ஒரு பரபரப்பான கதைக்களம் வந்தால் அதன் உண்மையை உடனே காட்டாமல் பல எபிசோடுகளை கடந்து பின்பே அதன் சூட்டை குறைப்பார்கள்.
அப்படி தான் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வைத்து நாளுக்கு நாள் ஒவ்வொரு எபிசோடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
ஆனந்தி தான் கர்ப்பமாக இருப்பதை யாரிடமும் கூறாமல் தற்கொலை செய்ய முடிவு செய்திருந்தார்.

புரொமோ
அவர் குடும்பம், தோழிகள், காதலன் என எல்லோரிடமும் கடைசியாக பேசிவிட்டு தற்கொலை முயற்சி செய்ய துணிந்துள்ளார். இதனை அறிந்த ரெஜினா, ஆனந்தியை அறைந்து தற்கொலை முயற்சி செய்கிறாயா என கோபப்படுகிறார்.
உடனே ஆனந்தி இந்த முடிவுக்கு காரணம் நான் கர்ப்பமாக உள்ளேன் என கூறுகிறார், அவரது தோழிகள் ஷாக் ஆகிறார்கள்.
இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன் - x கணக்கு நீக்கம், ECB எச்சரிக்கை News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri